சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியது. இதனை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் சுற்றுப்புறத் தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம், திமுக நகர செயலாளர் பொன்னுசாமி உட்பட கலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பத்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கால்வாய்கள் வழியாக மழைநீர் கழிவுநீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும் எனவும் நகராட்சித் தலைவர் கூறினார்.