கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் டீ கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார், துணை தலைவர் செந்தில் உள்ளிட்டர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சில கடைகளில் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் 4 கடை உரிமையாளர்களுக்கு தலா 300 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும்  பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.