ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.டி.சி பிரபாகரன், இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோமா என்று சில பேருக்கு சந்தேகம் இருக்கலாம். நாம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழலாம். அனலும் இல்லாமல்,  குளிரும் இல்லாமல் இருக்கிறோமா என்கின்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால் ஒன்றை உங்கள் உள்ளத்திலே வைத்துக் கொள்ளுங்கள்.

சரியான, நேரான பாதையில்,  சரியான நேரத்தில் நாம்  போய்க் கொண்டிருக்கிறோம். உரிய நேரத்தில் அண்ணன் எடுக்கிற முடிவு இந்த இயக்கத்தை காப்பாற்றும்.தொண்டர்களை காப்பாற்றும். இந்த இயக்கம் பிளவுபட்ட போது….  நாம் வேண்டாம் என்று சொன்னபோது…  பெரும் பணக்காரர்கள் எல்லாம் அந்த பக்கம் போய் விட்டார்கள். அண்ணன் மருது அழகு ராஜ் சொல்லுகிறார்..  டெண்டர் பாய்ஸ் எல்லாம் போய் விட்டார்கள். மிச்சம் மீதி இருக்கின்றவர்கள் எல்லாம் ஒரு பக்கம் அண்ணன் சகோதரர் டிடிவி பக்கம் போனார்கள்.

மீதம் இருக்கின்றவர் யார் என்றால் ? கையிலே காசு இல்லாவிட்டாலும் கூட…  மனதிலே மாசு  இல்லாத தொண்டர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். இது என்ன நியாயம் ?  என்று கேட்கிற உணர்வு யாருக்கு இருக்கும் என்று சொன்னால் ? கையிலே காசு விட்டாலும் கூட…  நியாய உணர்வோடு பார்க்கிற நன்றியுள்ள தொண்டனுக்கு தான் தெரியும் இந்த தியாக வரலாறு என தெரிவித்தார்.