தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு 5 மாவட்டங்களுக்கும் மிக மகிழ்ச்சியான அறிவிப்பு தான். ஏனெனில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் அந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.