தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 20 வருடங்களாக சொல்கிறார். சில உட்கட்சி விஷயங்களைப் பற்றி பேசுவது பதவிக்கு நல்லது அல்ல. மக்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நான் என்ன பேசினாலும் அது குறித்து வெளியில் சொல்லுவேன். நான் லஞ்சம் வாங்கினேனா என்பதை தேடிப்பிடித்து அதற்கு பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.

அரவக்குறிச்சி தொகுதியில் நான் செலவு செய்தது குறித்து தெரிந்து கொள்ள அரசு உளவுத்துறை 70 ஆயிரம் போலீசாரை கர்நாடகாவிற்கு அனுப்பப்பட்டும். நான் கர்நாடகாவில் 9 வருடங்கள் பணியில் இருந்த போது ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கினேனா என்பதே தேடிப் பிடித்து வந்து சொன்னால் நான் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது எதிரிகளும் கிடையாது என்று கூறினார்.