இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்முடைய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். 28 மீனவர்களையும் தற்போது விடுவிப்பதோடு அவர்களின் மீன்பிடி படங்களையும் விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக நான் பலமுறை கடிதம் எழுதியும் மீண்டும் அதே நிலைமைதான் தொடர்கிறது. எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக நேரடியாக தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.