பிரபல நடிகை காயத்ரி ரகுராம் தனது twitter-இல் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் சிலை மீது ஊதுகிறார். மேலும் அந்த சிலையின் வாயில் சிகரெட்டை வைக்கிறார். இந்த சம்பவம் வட மாநிலத்தில் நடந்துள்ளது. இது மிகவும் அவமானமான செயல். அந்த நபரை கைது செய்து பாடம் புகட்ட வேண்டும் என காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.