தேனி கம்பத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கம்பத்துக்கும் எனக்கும் மிகப் பெரிய தொடர்புண்டு. 678 கிராமங்களில் தான் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டுவதற்கு கேரள அரசு எடுத்த முயற்சிகளை தடுப்பதற்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளேன்.

கேரளாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகிறார். இவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்காது என கம்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ பேசியுள்ளார். அணையை இடிப்பது, நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வருவது என மீண்டும் ஆரம்பித்தால் நான் மக்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன் என்று வைகோ பேசியுள்ளார்.