அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில் அச்சம் இருந்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, கலங்கி போயிருந்தேன், அச்சத்துடன் இருந்தேன். ஏனெனில் தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி நேற்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன். ஆனால் ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோயிலில் வழிபட்டவுடன் அற்புதமான செய்தி வந்து சேர்ந்தது என்று இபிஎஸ் ஆனந்த கண்ணீருடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.