அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக 7 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் நிலையில், தற்போது உதவி ஆணையர் ராம ஸ்ரீகாந்த் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தெரிகிறது.