விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடை உரிமையாளர் நகராட்சிக்கு 2 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று நகராட்சி ஊழியர்கள் பேக்கரி கடை பெண் பணியாளர்கள் உள்ளே இருக்கும் போதே சீல் வைத்து சென்றனர்.

இதனால் பெண் ஊழியர்கள் பதற்றமடைந்து செல்போன் மூலம் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டிடத்தின் சீலை அகற்றி பெண் ஊழியர்களை வெளியேற்றினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.