விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தவசிலிங்கத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் தவசலிங்கத்திற்கு 5 ஆண்டுகள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.