திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மதுபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஸ்ரீ ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மது போதையில் பேருந்தை ஓட்டி வந்த தனியார் பேருந்து டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.