திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா ?  அதற்கான பணிகளை அவுங்களே செய்றாங்கன்னு நீங்க சொல்றீங்களா ?  என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தடா பெரியசாமி,

மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்கள் என்று நான் சொல்கிறேன். ஏங்க திருமாவளவன் பாஜகவை இவ்வளவு அடி அடிக்குறாங்க. எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியுது.  பாரதிய ஜனதா கட்சியை எந்த அளவுக்கு இவர் விமர்சனம் பண்றாரு ? எவ்வளவு பண்றாரு ? அப்படி இருந்தும் நீங்க வந்து அந்த இடத்தில் என்னை விட்டுட்டு வேற பெயரை போடுறீங்க அப்படின்னா….

பாரதிய ஜனதா கட்சி திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிட்டு,  மறைமுக வேலை செய்து சதி பண்ணி இருக்காங்க.  கட்சியை குழிதோண்டி புதைச்சு இருக்காங்க. என்ன காரணம் ?  என்னவென்று கேட்டபோது பதில் அளித்த தடா பெரியசாமி,

என்ன காரணம் உங்களுக்கு தெரியாதா ? எல்லாமே சுயநலம்தான்…. எல்லாமே சுயநலம். ஒருவேளை நான் திருமாவளவனையே வெற்றிபெற்று ஜெயிச்சுட்டா, இங்க வந்து அண்ணாமலை அவர்களுக்கும்,

தலைமை என்னதான் பாக்கும். அப்ப அண்ணாமலை தலைமை,  முருகன் தலைமை சிக்கல். அதனால நான் இவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது. நான் வெற்றிபெற்றால் வம்பு,  இவருடைய லீடர்ஷிப் போயிடுவதற்காக வந்த கோளாறு. பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவர்கே மரியாதை இல்லை என்றும் அவர் புலம்பினார்.