பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச்.30) சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மக்கள் அனைவரும் சேர்ந்து திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும். திருமாவளவனுக்கு திமுகவில் மரியாதையே இல்லை.

தனக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். அதற்கு திமுக தலைமை ஒத்துக்கொள்ளவில்லை. விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது விழுப்புரம் சிதம்பரம் கட்சி என இப்போது தான் தெரிகிறது” என்றார்.