கடலூர் மாவட்டத்தில் உள்ள முடப்பள்ளி காலனியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் சிரஞ்சீவி(16) கடந்த 16-ஆம் தேதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று புத்தாண்டுகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் முத்தாண்டி குப்பம் கருப்பசாமி கோவில் அருகே சென்றபோது விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிரஞ்சீவி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிரஞ்சீவி உள்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.