திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திட்டுப்பாறை பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கமுத்து தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயம்- சென்னிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் அதே சமயம் பழனிசாமி என்பவர் சாலையை கடக்க முயன்றார் அப்போது எதிர்பாராதவிதமாக தங்கமுத்து ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பழனிச்சாமி மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தங்கமுத்துவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பழனிசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.