தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை விளையாட சென்ற அவர் தாகத்துடன் வந்து வீட்டில் உள்ள குடத்தில் இருந்த தண்ணீரை குடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் குடத்தில் இருந்த தண்ணீர் மட்டும் தான் குடித்தேன் என்று அவர் கூறியுள்ளார். அதனை சோதித்துப் பார்த்ததில் எலி மருந்து பாக்கெட் கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.