ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த கைனூரை சேர்ந்த முருகன் மற்றும் கௌரி தம்பதியினர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். திடீரென முருகன் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியாக வாழ ஆரம்பித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கு முருகன் மீது சந்தேகம் எழுந்த நிலையில், சில இளைஞர்கள் உங்களிடம் தங்க பிஸ்கட்டுகள் இருப்பது தெரியும் அதில் தங்களுக்கும் தர வேண்டும் என்று முருகனை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்த முருகன் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்த நிலையில் அவர் போலீஸ் இடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட் மற்றும் 1,10,000 ரூபாய் ரொக்க பணத்தையும் முருகன் எடுத்து போலீஸ் இடம் ஒப்படைத்துள்ளார். முருகனும் அவருடைய மனைவியும் அரக்கோணத்தில் உள்ள நகைக் கடைகள் உள்ள பகுதியில் கழிவு நீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து ஜலித்து எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது இவர்களுக்கு பிஸ்கட் கட்டி கிடைத்த நிலையில் அதில் பகுதியை விற்று பணம் ஆக்கி செலவு செய்துள்ளனர். இந்த நிலையில் தங்க கட்டிகளை காணவில்லை என யாரும் புகார் தராததால் முருகன் மற்றும் அவருடைய மனைவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.