கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்பரசு கள்ளக்குறிச்சி விநாயகர் பட்டறைக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கரூருக்கு சென்றார்.

இதனையடுத்து வேலை முடிந்ததும் மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு வந்து பார்த்தார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்பரசு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.