மதுரை அலங்காநல்லூரில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் கார்த்தி என்ற இளைஞர் 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் பரிசை பெற்று கார் வென்ற கார்த்தி 2023 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டின் போது படுகாயம் அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். தற்போது 2024ல் மீண்டும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

அவர் பேட்டியளித்த போது அரசிற்கு ஒரு கோரிக்கை என்று கூறி டிகிரி படித்துள்ள தனக்கு வேலை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.