திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் மேரி என்பவர் மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த ஒரு பெண் ஆசை வார்த்தைகள் கூறி நூதன முறையில் மேரியிடமிருந்து 6 பவுன் தங்க நகையை திருடி சென்றார். இதுகுறித்து மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க நகையை திருடி சென்ற பெண்ணை தேடி வந்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தங்க நகையை திருடிய டெய்சி(40) என்பவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 6 பவுன் தங்க நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.