தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சந்தைகளில் காய்கறி விற்பனை ஜோராக நடைபெற்றது.

கரும்பு, மஞ்சள், மொச்சை, அவரை, சர்க்கரை பூசணி, வாழைப்பழம், தேங்காய், காய்கறிகள் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐந்து உழவர் சந்தைகளிலும் சுமார் 78 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.