கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வருகிற 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 28 வகையான போட்டிகளில் 5000 விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கேளு விளையாட்டு போட்டி விழிப்புணர்வு வாகனத்தை கொடியை செய்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, திருக்குறள், பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.