கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழ் யாழினி(3) என்ற மகளும் சாஜித்(1) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது இரண்டு குழந்தைகளுடன் வடதொரசலூர் ஏரிக்கரை அருகே இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கிடையே அச்சத்தில் சரண்யா மட்டும் நீச்சலடித்து கரையேறி உள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரண்யா திட்டமிட்டு தனது குழந்தைகளை கொலை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.