சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை கடன் வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மோகன் என்பவர் 24 கிராம் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த நகைகளை சோதனை செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் வைத்திருந்த ஆவணங்களை சோதித்து பார்த்த போது மோகன் அதே நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் போலியான நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் மோகனை பிடித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.