சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசனுக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை நம்பி குமரேசன் 19 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு பணம் வரவில்லை. இதுகுறித்து குமரேசன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.