ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடிப்பதற்காக மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசன் 18 வயது சிறுவன் ஆகியோர் இருந்தனர்.

அப்போது தமிழரசனும், சிறுவனும் இளங்கோவிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இளங்கோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசன் மற்றும் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.