சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி ஊராட்சியில் சிவகாமி என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் ஊராட்சியில் செயலாளராக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் என்பவர் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாகவும், போலியான கையெழுத்துக்களை போட்டு முறையாக பணிக்கு வராமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் கல்யாணசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.