திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் இம்ரான் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை மகாராஜன் என்பவர் குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை. இதனால் இம்ரான்கான் மகாராஜனின் வீட்டிற்கு சென்று தவணை தொகையை கேட்டுள்ளார்.

அப்போது மகாராஜன் தவணைத் தொகையை கட்ட மறுத்து இம்ரான்கானை தகாத வார்த்தைகளால் திட்டி செங்கல்லால் தாக்கியுள்ளார். மேலும் கங்காதரன், கபிலன் ஆகியோரும் இம்ரான்கானை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து இம்ரான்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான மகாராஜன் உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.