தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி 9 வருடங்கள் ஆட்சியை முடித்து தற்போது 10-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். பிரதமர் மோடியின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியாக அமைந்துள்ளது. பெண்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என பல்வேறு நல்ல திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது களம் மாறிவிட்டது. 30 வருடங்களாக கூண்டில் இருந்த கிளி தற்போது சுதந்திரமாக பறக்க தயாராகிவிட்டது.

தமிழக மக்களிடம் கிளியால் பறக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. தற்போது புரட்சிக்கான நேரம் தமிழகத்தில் தயாராகிவிட்டது. நமக்கான நேரமும் வந்துவிட்டது. இனி பாஜகவினர் எங்கும் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டாம். பாஜகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் 45 சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் உதவியால் இலங்கையிலும் எங்கு சென்றாலும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மோடி அரசு அமைந்த பிறகு இலங்கையால் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படாத அளவுக்கு தற்காத்து வருகிறது. மேலும் 2024-ல் மீண்டும் பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வரப்போகிறார் என்று கூறினார்.