ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.