ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகர் நகரில் இன்று மதியம் 1 மணியளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஎஸ்ஐ) கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த அமைச்சர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேல்சிகிச்சைக்காக புவனேஸ்வர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பதற்றம் நிலவியது. அமைச்சர் ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.ஐ.யை உள்ளூர் மக்கள் பிடித்து, பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். அமைச்சர் கிஷோர் தாஸின் ஆதரவாளர்கள் “பாதுகாப்பு குறைபாடுகள்” என முழக்கமிட்டு பரபரப்பை கிளப்பினர். அமைச்சர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.