அதானி நிறுவனங்கள் மோசடி செய்வதாக ஹிண்டென்பர்க் அறிக்கை விடுத்ததை தொடர்ந்து அதன் பங்குகள் பலத்த சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள LIC மற்றும் கடன் கொடுத்துள்ள SBI ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் SBI, “குறைவான அளவிலேயே கடன் கொடுத்திருக்கிறோம். இதனால் பாதிப்பு ஏதும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.