விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி பகுதியில் மினி பஸ் இயங்குகிறது. இதன் டிரைவராக கதிரேசன் என்பவர் இருக்கிறார். கண்டக்டராக தங்கபாண்டி என்பவர் உள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மினி பஸ் வன்னியம்பட்டி விலக்கு அருகே சென்றபோது ஆட்டோ டிரைவர்களிடம் பயணிகள் ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஆட்டோ டிரைவர்கள் பால்பாண்டி, பார்த்திபன், செந்தில் உள்பட ஆறு பேர் கதிரேசன் மற்றும் கண்டக்டர் தங்கபாண்டி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.