விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பெரியார் நகரில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று நாகராஜின் மனைவி முத்துலட்சுமி வேலைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு வீட்டில் தனியாக இருந்த நாகராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.