தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஞானமணி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியிடங்களை நிரப்ப இருப்பதால் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 04286-222260, 9159662342 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.