கோவை மாவட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்ததற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அனைத்து குளங்களையும் தூய்மைப்படுத்தி இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் அமைதி நிறைந்த இடமாகவும் மாற்றி உள்ளது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு கவரும் விதமாக திருச்சி சாலையில் வாலான் குளம் போட் ஹவுஸ் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள போர்ட் ஹவுஸ் பாதுகாப்பான முறையில் சுற்றுலாத்துறை வழிகாட்டுதல் படி செயல்படுகிறது.

இந்த போட் ஹவுசில்  நாலு பேர் முதல் எட்டு பேர் வரை பயணம் செய்யலாம். 20 நிமிடங்கள் வரை இந்த குளங்களில் ஜாலியாக மிதக்கலாம். வெளிநாடுகளில் இருக்கும் ஜெட் ஸ்ஸ் கை எனும் போட்டானது கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த போர்ட் ஹவுசில் இருக்கிறது. எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த போர்ட் ஹவுஸ் சில் ஜெட் ஸ்கை பயணம் செய்து வருகிறார்கள். இது யாருக்குத்தான் பிடிக்காது . இங்க இருக்கும் அனைத்து போட் பயணங்களுக்கும் தனித்தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஒரு நாள் ட்ரிப் போக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு வந்தால் புதிய அனுபவமாக இருக்கும்.