மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 63 பயணிகள் சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் சமைக்கும் போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.