தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி புரம் ஒன்றாவது தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது. இதற்காக இசக்கிமுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் டீக்கடை முன்பு வைத்து திடீரென இசக்கிமுத்து கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டார்.

இதனால் படுகாயம் அடைந்த இசக்கி முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.