கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு பொன்னச்சான் விளையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் குமாரியிடம் 50 ரூபாய் கொடுத்து இரண்டு சிகரெட் வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் குமாரியின் கழுத்தில் கிடந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.