மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் அவர்களது ஊதிய உயர்வு பற்றிய நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவிக்கக்கூடும். அதோடு ஹோலி பண்டிகைக்கு பின் நிதியமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிடும் எனவும் ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்த அறிவிப்புக்கு பிறகு சம்பளம்  அதிகரிக்கப்படும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதுபற்றி முறையான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதுவரையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. மார்ச் மாத சம்பளத்திலிருந்து 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இருந்தாலும்  சில ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்திலிருந்து அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படியை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து அதில் திருத்தம் செய்யும். எனவே உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத அரியர்தொகை மார்ச் மாத சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும்.