பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன ராஜ்குமார் என்ற  குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்து இருக்கிறார்கள்.

பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முதல் குற்றவாளி வெங்கடேசன் என்ற ராஜ்குமார் இந்த கொலையை செய்துவிட்டு, இருச்சக்கர வாகனங்களை அதே இடத்தில் போட்டுவிட்டு, தொட்டம்பட்டி காட்டு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி டேங்க் மேலே ஏறி ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த கொலை வழக்கில் நேற்று அவர்கள் சரணடைந்த நிலையில் போலீசார் அவர்கள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று  விசாரணை  மேற்கொண்டனர்.விசாரணைக்கு மேற்கொண்ட நேரத்தில் திடீரென்று ராஜ்குமார் தப்ப முயன்றதாகவும்,  ஓடிய ராஜ்குமாரை போலீசார் கால் முட்டியில் சுட்டு படித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய இந்த நான்கு பேருடைய படுகொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வெங்கடேச என்கின்ற ராஜ்குமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.