கரூர் மாவட்டத்திலுள்ள புதுகுளத்து பாளையம் பகுதியில் பி.காம் பட்டதாரியான சசிகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உயரம் 3 1/2 அடி ஆகும். இதே உயரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வணிகவரி துறையில் வேலை பார்த்து வருவதாக சசிகுமாரின் நண்பர்கள் தெரிவித்தனர். அவரைப் பார்க்க சென்ற சசிகுமாருக்கு பெண்ணை பிடித்து விட்டது.

இதனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சசிகுமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பி.ஏ பட்டதாரியான சாந்திக்கும்(40), சசிகுமாருக்கும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் புதுகுளத்து பாளையத்தில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.