கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.