உலகின் மிக உயரமான பெண்களில் ஒருவரான மரியா ஃபெலிசியானா டோஸ் சாண்டோஸ் (77) அரகாஜூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். டீனேஜராக இருந்தபோது, திடீரென 7 அடி 3.8 அங்குல உயரத்திற்கு வளர்ந்தார், 1960ல், அவர் ‘வெள்ளை ராணி’ என்ற பட்டத்தை வென்றார், மேலும் அவரது பெயர் பிரேசில் முழுவதும் ஒலித்தது. பிரேசிலில் உள்ள அருங்காட்சியகத்தில் மரியாவின் சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.