நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லப்பம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் போன்றவற்றை குறித்து கேட்டறிந்துள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி உள்ளதா? படுக்கை வசதிகள் இருக்கிறதா? சமையலறை சுகாதார சுகாதாரமான முறையில் இருக்கிறதா? போன்றவற்றை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.  கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளை சுகாதாரமாக வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.