ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் கிராமத்தில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகாவுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அம்பிகாவின் குடும்பத்தினர் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர்.

அந்த ஆம்புலன்ஸ் எலவநத்தம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அம்பிகாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் மருத்துவ உதவியாளர் தங்கமணி அம்பிகாவுக்கு பிரசவம் பார்த்தார். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் சிவகிரி அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் நலமாக இருக்கின்றனர்.