திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அகரமேல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் லேத் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது நண்பர் ரஞ்சித் என்பவருடன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பூந்தமல்லி அருகே  சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சந்தோஷ் படுகாயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் நேற்று முன்தினம் மூளை சாவு அடைந்தார். அவரது பெற்றோரின் சம்மதத்துடன் சந்தோஷின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.