கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி தீன் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் அடிக்கடி மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குமார் மது குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது தமிழரசி தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்தகுமார் தமிழரசியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து தமிழரசி அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.